Additionally, paste this code immediately after the opening tag:

Tamil Medicine சித்த வைத்தியம்

Siddha Medicine (" சித்த மருத்துவம்" or " தமிழ் மருத்துவம் " in Tamil) is usually considered as the oldest med...

Free

Store review

Siddha Medicine (" சித்த மருத்துவம்" or " தமிழ் மருத்துவம் " in Tamil) is usually considered as the oldest medical system known to mankind. Contemporary Tamil literature holds that the system of Siddha medicine originated in Southern India, in the state of Tamil Nadu, as part of the trio Indian medicines - ayurveda, siddha and unani. Siddha is reported to have surfaced more than 10,000 years ago.

நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் மனிதர்களுக்கு தொடக்கமாக உள்ளது நமது இந்திய பண்பாட்டுக்கு உகந்த முறையில் மக்களின் உடலில் கோளாறுகள் உருவாகிறது,அதை சரி செய்ய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மருத்துவ அறிஞர்கள் சித்தர்கள் மருத்துவ முறைகளை கையாண்டு அனுபூதியான அவர்கள் தனக்கு பின்னால் தாஙகள் கையாண்ட முறைகளை எதிர்கால சந்ததிக்கு கொடுத்தும் ஏடுகளின் மூலமும்,நூல்களின் மூலமும்,குரு பாரம்பரியம்,குடும்ப பாரம்பரியம், மருத்துவ முறைகளை விட்டு சென்றார்கள்.கால வேகம் அரசியல் மாற்றம்,இனபாகுபாடு,இவைகளின் தாக்குதலால், மேற்கண்ட முறை பல வகையாக சிதறின. சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்நிய தேசத்தவர்கள் கையில் நமது தேசம் உட்பட்டது,அவர்களுடைய மருத்துவ முறைகளும் உள்ளே புகுத்தப்பட்டது அந்நிய தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. நமது தேசத்தவர்களின் மருத்துவ முறைகள் மெய்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.விஞ்ஞானம் என்பது விநாடிக்கு,விநாடி மற்றம் அடையக்கூடியது,மெய்ஞானம் ஆதியை உணர்ந்து என்றும் மாறாத நிலைத்த தன்மை உடையது. அவர்களின் நவீன மருத்துவ முறைகளில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்பட்டன. சித்தர்களின் காலத்திற்க்குப்பின் சித்த வைத்தியத்தை தொடர்ந்து கையாண்டவர்களில் சிலர் சுய நல மிக்கவர்களால் தன்வசம் உள்ள மருத்துவ முறைகளை மறைக்க துவங்கினார்கள் இப்படி பல்வேறு அற்புத செய்முறைகள் மறைந்தே போயின.
அனைத்து மாற்று மருத்துவ முறைகளும் சித்த மருத்துவத்தின் அடிப்படியிலிருந்து தான் உருவானது. இன்றைய காலகட்டத்தில் ஆயுர்வேதம் என்று கூறப்படும் மருத்துவமானது ஆயுள் வேதம் என்ற சொல்லின் மருவிய வார்த்தை. இந்த ஆயுள் வேதமானது இராவணன் அவர்களால் இந்த உலகிற்கு மனித குலத்தின் ஆயுளை கூட்டி வாழ்வதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை.

Store rating

4

out of

1085 reviews

Last update

Dec. 4, 2019

Read more